குளிரூட்டப்பட்ட உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்?

Date:

75 சதவீத மின்சாரக் கட்டண உயர்வால் குளிர்சாதன உணவுப் பொருட்களான தயிர், ஐஸ்கிரீம் மற்றும் இறைச்சி போன்ற குளிரூட்டப்பட்ட மற்றும் உறைந்த பொருட்களின் விலை அதிகரிக்கும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் கணித்துள்ளது.

கட்டண உயர்வினால் உணவக உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் உணவுப் பொருட்களின் விலையை குறைத்ததை அடுத்து மின்கட்டணம் உயர்த்தப்பட்டது.

அதேபோல வாடிக்கையாளர்களை மீண்டும் உணவகங்களுக்கு ஈர்க்கும் வகையில் வழக்கமான தேநீர் கோப்பை ரூ.30 மற்றும் மதிய உணவுப் பொதிகள் 10 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும், குளிர்சாதனப் பொருட்களுக்கான விலைகள் மட்டுமின்றி கடைகளில் மின் கட்டணம் உள்ளிட்ட விலை உயர்வால் தாங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உற்பத்தி நிறுவனங்கள் பொதுமக்கள் மீது திணிக்கப்படும் விலையை நிர்ணயிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...