குடியகல்வு திணைக்களத்தின் முடிவு சட்டவிரோதமானது: ரிட் மனு தாக்கல் செய்தார் பிரித்தானிய பெண்!

Date:

இலங்கையின் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை சமூக ஊடகங்களில் ஆவணப்படுத்தி வந்த பிரித்தானிய பெண் இன்ஸ்டாகிராமர் கெய்லி பிரேசர், தன்னை இலங்கையிலிருந்து நாடு வெளியேற்றுவதற்கான அதிகாரிகளின் முடிவை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், விசா நிபந்தனைகளை மீறியதற்காக பிரேசருக்கு வழங்கப்பட்ட வீசாவை நிறுத்துவதற்கு தீர்மானித்திருந்ததுடன், ஆகஸ்ட் 15 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறுமாறு அவருக்கு அறிவித்திருந்தது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தன்னிச்சையான முறையில் நாடு கடத்தும் முடிவை ரத்து செய்ய உத்தரவிடுமாறு மனுதாரர் கோரியுள்ளார்.

மனுதாரர், குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு நாயகம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...