பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலைகள் உயர்வதற்கான அறிகுறிகள்!

Date:

முட்டை விலை உயர்வால் எதிர்காலத்தில் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் முட்டை விலையை குறைக்க அரசு தலையிட்டு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தலையிட்டால் பாண் ஒன்றின் விலையை 50 ரூபாவினாலும் பணிஸ் ஒன்றின் விலையை 25 ரூபாவினாலும் குறைக்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல நாட்டில் முட்டை விலையை 30, 35 ரூபாவிற்கு விற்க முடியும் எனினும், 60 ரூபாவிற்கு விற்கின்றார்கள். இது முட்டை மாபியா. இந்தியாவின் தமிழ்நாட்டில் முட்டையொன்றின் விலை 18 ரூபாவிற்கு விற்கப்படுகின்றது.

எனவே அங்கிருந்து முட்டை இறக்குமதி செய்தாலும் விலை குறைந்த விலைக்கு விற்கமுடியும் எனவே இதற்கு அரசாங்கம் உடனடியாக தலையிடவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...