வெளிநாட்டில் இருக்கும் மனைவியை அழைத்து வருமாறு குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய தந்தை!

Date:

தனது 5 வயது மகனின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை செய்யப் போவதாக மனைவிக்கு மிரட்டல் விடுத்த தந்தை ஒருவரை குளியாப்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றிருந்த தனது மனைவியை அழைத்து வரும் நோக்கில் அவர் இவ்வாறு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த காணொளியை சந்தேக நபர் தனது மனைவிக்கும் மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்பிய நிறுவனத்திற்கும் அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தந்தையின் ஆபத்தான செயலால் குழந்தை எப்படி மிகவும் பயந்துள்ளது என்பதை வீடியோ காட்டுகிறது.

சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து குளியாப்பிட்டிய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து குழந்தையை பொலிஸ் காவலில் எடுத்துள்ளனர்.

குழந்தை தந்தையுடன் செல்ல மறுத்துள்ளதுடன், தாய் வரும் வரை தனது உறவினருடன் செல்ல விரும்புவதாகவும் குழந்தை பொலிஸில் தெரிவித்துள்ளார்.

குழந்தையின் வாக்குமூலங்கள் பெறப்பட்டு, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Popular

More like this
Related

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...