பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விசேட கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவுள்ளன!

Date:

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

கொள்கை ரீதியில் இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

எனினும், தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, விசேட கொடுப்பனவை அதிகரிப்பதற்கான காலத்தை ஒத்திவைத்து, எதிர்காலத்தில் அமுலாகும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

தற்போது 14 நாட்களுக்கு மாத்திரம் வழங்கப்படும் விசேட கொடுப்பனவை எதிர்வரும் காலத்தில் 21 நாட்களாக அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் உணவிற்கான கொடுப்பனவிற்கு இணையாக இந்த விசேட கொடுப்பனவையும் அதிகரிக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி கூறினார்.

Popular

More like this
Related

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...

வரலாற்றில் முதன்முறையாக புதிய பெண் பஸ் நடத்துனர்களுக்கு நியமனம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 20 பஸ் நடத்துனர்களுக்கான நியமனங்களை...

எங்களுக்குத் தேவையற்ற கூடுதல் பாலின அடையாளங்கள் தேவையில்லை. ஹங்கேரி பிரதமர்.

பாலின அடையாளம் மற்றும் பாரம்பரிய குடும்ப விழுமியங்கள் குறித்த விவாதத்தில், ஹங்கேரி...

பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என இயற்கை...