பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விசேட கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவுள்ளன!

Date:

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

கொள்கை ரீதியில் இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

எனினும், தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, விசேட கொடுப்பனவை அதிகரிப்பதற்கான காலத்தை ஒத்திவைத்து, எதிர்காலத்தில் அமுலாகும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

தற்போது 14 நாட்களுக்கு மாத்திரம் வழங்கப்படும் விசேட கொடுப்பனவை எதிர்வரும் காலத்தில் 21 நாட்களாக அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் உணவிற்கான கொடுப்பனவிற்கு இணையாக இந்த விசேட கொடுப்பனவையும் அதிகரிக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி கூறினார்.

Popular

More like this
Related

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று...

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள்...