விமல் தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும்!

Date:

எதிர்வரும் அடுத்த மாதம் 4ஆம் திகதி விமல் வீரவன்ச தலைமையில் புதிய அரசியல் கூட்டணி அமைக்கப்படும் என சுயேட்சைக்குழு தெரிவித்துள்ளது.

ஶ்ரீ லங்கா கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பின் பின்னர், அந்த கட்சிகளின் பிரதிநிதிகள் இதனை கூறினர்.

புதிய அரசியல் கூட்டணியின் பெயரும் அன்றைய தினம் அறிவிக்கப்படும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

மேலும், தேசிய இளைஞர் சேவை மன்ற வளாகத்தில் வெளியிடப்படவுள்ள புதிய கூட்டணி தொடர்பான பல சுற்றுக் கலந்துரையாடல்கள் கடந்த சில நாட்களாக சுயேட்சைக்கட்சிகள் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றன.

அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 9 கட்சிகள் இந்த புதிய கூட்டணியை உருவாக்க தீர்மானித்துள்ளன.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...