தனியார் பேருந்துகளின் சேவை 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது!

Date:

டீசல் தட்டுப்பாடு காரணமாக சுமார் 50 சதவீதமான தனியார் பஸ்கள் இன்று (26) இயங்காது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அதேநேரம், நேற்றைய தினம் தனியார் பேருந்துகள் டீசலில் இயக்கப்பட்டதாக தெரிவித்த கெமுனு விஜேரத்ன, இன்று டீசல் வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளினால் இன்று 50 வீதமான பேருந்து ஓட்டங்கள் குறையும் சில நாட்களாக டீசல் கிடைக்காததே இந்த நிலைக்கு காரணம் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த வாரத்தில் தொடர்ச்சியான பேருந்து சேவையை வழங்குவதற்கு இந்த வார இறுதியில் போதுமான டீசல் இருப்புக்கள் பெறப்பட வேண்டும்.

இதேவேளை இலங்கை போக்குவரத்து சபையின் சில டிப்போக்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொள்வதில் சில சிக்கல்கள் இருப்பதாக சில தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Popular

More like this
Related

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாக்கியராஜ் மாரடைப்பால் மரணம்

பிரபல நடிகரும் இயக்குனருமான கே.பாக்கியராஜ் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். சென்னையிலுள்ள...

50,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பதிவான டெங்கு நோயாளர்களின்...

குற்றவாளி தப்பியோட போலி கடவுச்சீட்டு: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...