ரஞ்சன் விடுதலைக்கான ஆவணங்களில் கையொப்பமிட்டார்!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அனுமதியுடன், சிறைவைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்கான ஆவணங்களில் தாம் கையொப்பமிட்டதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க  (26) அல்லது திங்கட்கிழமை (29) விடுதலை செய்யப்படுவார் என சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்காக அயராது உழைத்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு ஹரின் பெர்னாண்டோ நன்றியும் தெரிவித்திருந்தார்.

ஆகஸ்ட் 2017 இல் நீதித்துறையைப் பற்றி அவமதிக்கும் கருத்துக்கள் தொடர்பாக, நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில், நடிகராக மாறிய அரசியல்வாதிக்கு உச்ச நீதிமன்றத்தால் ஜனவரி 12, 2021 அன்று நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் திரு ராமநாயக்கவை மன்னித்து விடுதலை செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தார்.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...