சவூதி, சீனா உள்ளிட்ட 24 வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கை பெற்றோலிய வர்த்தகத்தில் ஈடுபட விருப்பம்!

Date:

இலங்கையில் பெற்றோலிய வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு 24 நிறுவனங்கள் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா, ஐக்கிய இராச்சியம், மலேசியா, நோர்வே மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இவ்வாறான முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள குழு, உரிய முன்மொழிவுகளை மதிப்பீடு செய்து, 6 வாரங்களில் இந்த நடவடிக்கையை நிறைவு செய்யும் என எரிசக்தி அமைச்சர்  டுவிட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் 2025இல் அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக்...

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

நேற்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (07) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு...

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...