ஜனாதிபதி பிரதமராக இருந்த போது வழங்கிய வாக்குறுதி தொடர்பில் சஜித் கேள்வி!

Date:

ஜனாதிபதியும், சபாநாயகரும் கூறியது போல், பொது விவகாரக் குழுவின் தலைவர் பதவிகளையும், பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் பதவிகளையும் எதிர்க்கட்சிகளுக்கு வழங்க எடுக்கப்பட்ட தீர்மானம் அப்படியே நடைமுறைப்படுத்தப்படுமா? என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (ஆகஸ்ட் 29) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

அதேநேரம் தற்போது நிலைமை வேறுவிதமாக உள்ளதால் அந்த தீர்மானங்களை மாற்றுவதற்கான ஆயத்தங்கள் உள்ளதா எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொது வர்த்தக குழு மற்றும் பொது கணக்குகள் குழுவின் தலைவர் பதவிகளுக்கு ஈரான் விக்கிரமரத்ன மற்றும் கபீர் ஹாசிம் நியமிக்கப்படுவார்களா? மீண்டும் ஒருமுறை கேள்வி எழுப்பினார்.

அதேபோன்று, அதேபோன்று கோப் மற்றும் கோபா தலைவர் பதவிகளை எதிர்க்கட்சிகளுக்கு வழங்கும் வகையில் நிலையியற் கட்டளைகள் மாற்றப்படுமா? சஜித் பிரேமதாச மேலும் கேள்வி எழுப்பினார்.

Popular

More like this
Related

DPL-2026 Season 5 சாம்பியனாக தெல்தோட்டை டிராகன்ஸ் அணி தெரிவு

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, வாலிபர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட...

போலி விமான டிக்கெட்டுகள் தள்ளுபடிகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

விமான டிக்கெட்டுகளுக்கு மலிவான அல்லது சிறப்புத் தள்ளுபடிகளை வழங்குவதாகக் கூறி, சமூக...

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில். அமெரிக்க டொலர்கள்

இலங்கை நெருக்கடி நிலையிலிருந்து மீண்டு, மிகவும் நெகிழ்ச்சியான பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து...

எரிபொருள் QR குறியீடு தொடர்பில் 1000 முறைப்பாடுகள்!

தவறான முறையில் அல்லது பிறருடைய QR குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருள் பெற்றமை...