சுயேட்சையாக இணைந்த எம்.பி.க்கள் குழுவின் புதிய கூட்டணி இன்று அறிவிக்கப்படும்!

Date:

அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயேட்சையாக இணைந்த எம்.பி.க்கள் குழுவின் புதிய கூட்டணி இன்று அறிவிக்கப்படவுள்ளது.

கூட்டணியின் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

எவ்வாறாயினும், புதிய கூட்டணியின் பெயர் மற்றும் அதன் தலைவர் யார் என்பது இன்று அறிவிக்கப்படும் என அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுதந்திரமாக செயற்பட்ட ஜனநாயக இடதுசாரி முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று உருவாகும் புதிய கூட்டணி இந்த நாட்டின் அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமையும் என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் புதிய கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தற்போதுள்ள அரசியலமைப்பை மாற்றி சித்தாந்த அரசியல் வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துவதே புதிய கூட்டணியின் பிரதான நோக்கம் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...