கிழக்கில் 10 கோடி செலவில் அமைக்கப்பட்ட மூன்று மாடி பாடசாலை கட்டடம் திறந்து வைப்பு!

Date:

மட்டக்களப்பு மத்தி வலயத்திற்குற்பட்ட காத்தான்குடி கல்விக் கோட்டத்திற்குற்பட்ட மீரா பாலிகா மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட மூன்று மாடி கட்டிடம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலை முதல்வர் அஷ்ஷெய்க் யூ.எல்.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக பங்கேற்று கட்டடத்தினை திறந்து வைத்தார்.

நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா, காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது கடந்த வருடம் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சகல துறைகளிலும் உயர் சித்தியடைந்த மாணவிகள் கொளரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வின்போது கட்டடத்தினை அமைப்பதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பாடசாலை சமூகத்தினரால் பொன்னாடை போர்த்தி கொளரவிக்கப்படமை குறிப்பிடத்தக்கது.

10 கோடி செலவில் கிழக்கில் அமைக்கப்பட்ட முதலாவது மூன்று மாடி பாடசாலை கட்டடம் இதுவாகும்.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...