இந்தியாவிற்கு அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களை மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை!

Date:

(File Photo)

தமது நாட்டிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க குழுவொன்றை உருவாக்கியுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சந்திமா விக்ரமசிங்க தலைமையில் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி, பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி மற்றும் நீதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

யுத்தம் காரணமாக இந்தியாவிற்கு அகதிகளாக தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களை மீள அழைத்து வருமாறு ஈழ அகதிகள் புனர்வாழ்விற்கான அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதுடன், ஜனாதிபதி அலுவலகத்தில் செப்டம்பர் 5 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தமிழ்நாட்டில் அகதிகளாக வாழும் சுமார் 58,000 இலங்கையர்களில் வெறும் 3,800 பேர் மட்டுமே தற்போது தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பத் தயாராக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் துறையில் உள்ள முயற்சிகள் சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

Popular

More like this
Related

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க...

யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை மெட்ரோ பேருந்து!

எதிர்வரும் நாட்களில் புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளதுடன், ஆண்டின் இறுதிக்குள்...

புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு சலீம் ஆசிரியரை தலைவராகக் கொண்ட புதிய நிர்வாக சபை தெரிவு.

நேற்று புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கான புதிய நிர்வாக சபை தெரிவுக்குரிய நிகழ்வுகள்...

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு!

2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு...