இந்தியாவிற்கு அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களை மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை!

Date:

(File Photo)

தமது நாட்டிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க குழுவொன்றை உருவாக்கியுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சந்திமா விக்ரமசிங்க தலைமையில் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி, பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி மற்றும் நீதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

யுத்தம் காரணமாக இந்தியாவிற்கு அகதிகளாக தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களை மீள அழைத்து வருமாறு ஈழ அகதிகள் புனர்வாழ்விற்கான அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதுடன், ஜனாதிபதி அலுவலகத்தில் செப்டம்பர் 5 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தமிழ்நாட்டில் அகதிகளாக வாழும் சுமார் 58,000 இலங்கையர்களில் வெறும் 3,800 பேர் மட்டுமே தற்போது தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பத் தயாராக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் துறையில் உள்ள முயற்சிகள் சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

Popular

More like this
Related

மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைப் பேணுவதில் முன்மாதிரியாகத் திகழும் புத்தளம்.

நேற்று நடைபெற்ற அருட்தந்தை திலங்க அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு! புத்தளம் மாவட்ட சர்வ...

இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்!

ஈரான் மற்றும் வளைகுடா வான் பரப்பில் இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர்...

காசாவில் மீண்டும் உயிர்பெற்ற பல்கலைக்கழகக் கல்வி: நீண்ட இடைவேளைக்குப் பின் கூடார வகுப்பறைகளுக்குத் திரும்பிய காசா மாணவர்கள்.

போரினால் நீண்டகாலமாக முடக்கப்பட்டிருந்த உயர்கல்விச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்கும் நோக்கில், தெற்கு...