நாவலப்பிட்டியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு MFCD உதவி!

Date:

அண்மையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி பிரதேசத்தில் நிலையான வருமானம் மற்றும் நீண்ட கால சுய வேலைவாய்ப்பு உதவிகளை ஆதரிக்க பாதிக்கப்பட்ட ஒன்பது  பேருக்கு முஸ்லிம் கலாச்சாரம் மற்றும் வளர்ச்சிக்கான அறக்கட்டளையினால் (MFCD) உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.

அதற்கமைய வெல்டிங் ஆலை, சமையல் உபகரணங்கள், கிரைண்டர் மற்றும் வாசனை திரவியங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

நாவலப்பிட்டி பிரதேசம் பெருமளவில் வெள்ளத்தில் மூழ்கியதுடன் வீதிகள் கூட கிட்டத்தட்ட ஆறுகளாக மாறியது வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.

இதனால் அங்குள்ள மக்கள் இழந்த வீடுகளை புனரமைப்பது உட்பட மிகவும் அவநம்பிக்கையான பல குடும்பங்களின் வாழ்க்கை சீர்குலைந்துள்ள நிலையிலேயே MFCD அமைப்பு தேவையான உதவிகளை வழங்கிவைத்தது.

இந்நிகழ்வில் கண்டி அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் நந்தன தேவப்பிரிய, உதவிப் பணிப்பாளர் திட்டமிடல் திருமதி ஜி சித்தாரா மாதவி, பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஷகீலா செவ்மினி ஆனந்த, பஸ்பகே கோரலே மற்றும் அமைப்பின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

ஜனாதிபதி மாளிகை குத்தகைக்கு: அமைச்சரவை அனுமதி

அரசுக்கு சொந்தமான மாளிகைகள், வீடுகள் மற்றும் ஜனாதிபதி மாளிகைகளை பொருளாதார ரீதியாக...

இலங்கை தமிழ் இளைஞருக்கு சவூதியில் சிறைத்தண்டனை விவகாரம்: விரிசல்களை வளரவிடாது இன நல்லிணக்கத்தை பாதுகாப்பது முக்கியம்

சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த அனோஜன் என்ற இளைஞருக்கு,...

மெக்குவாரி வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஷெமாரா விக்ரமநாயக்க ஓய்வு

ஆஸ்திரேலியாவின் முன்னணி நிதிச் சேவை நிறுவனமான 'மெக்குவாரி குரூப்' (Macquarie Group)...

ராஷித் அல்-கன்னூசியின் உடல்நிலை குறித்து சர்வதேச முஸ்லிம் உலமாக்கள் ஒன்றியம் கவலை: துனிசிய அரசிற்கு கோரிக்கை!

துனிசியாவின் மூத்த அரசியல் தலைவரும், பிரபல இஸ்லாமிய அறிஞருமான ஷேக் ராஷித்...