போசாக்கின்மையால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைந்து வருகின்றது: வைத்தியர் தீபால் பெரேரா

Date:

கடந்த இரண்டு மாதங்களில் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் பெரும்பாலானோர் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

அதேநேரம், குழந்தைகளுக்கு சரியான சத்தான உணவு கிடைப்பதில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த குழந்தைகளில் பெரும்பான்மையானவர்கள் பொதுவான ஊட்டச்சத்து குறைபாடு, அதிக ஊட்டச்சத்து குறைபாடு போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர் என்பதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் குழந்தைகளில் பாதியளவுக்கு வயிறு நீண்டு வெளியே வந்துள்ளதாகவும் இது தவிர மற்றுமொரு சிறுவர்கள் உடல் எடையை குறைத்து மெலிந்துள்ளதாகவும் இதுவே போசாக்கின்மை நிலைமை எனவும் தெரியவந்துள்ளது.

கடந்த வருடம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் சுமார் 100 பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 900 சிறுவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் சிறுவர் சிகிச்சை நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விசேட வைத்தியர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக பாடசாலைகள் மூடப்பட்டதால், சரியான சத்தான உணவு கிடைக்காததுடன், குழந்தைகளின் மனநிலையும் வீழ்ச்சியடைந்துள்ளது என்றார்.

மேலும், சிற்றுண்டி, இனிப்பு பானங்கள் வழங்காமல் முன்பு போல் சத்தான உணவுகளை கொடுத்து குழந்தைகளை செயல்களில் ஈடுபடுத்த பெற்றோர்கள் முழு முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.

சிறார்களை இந்த போசாக்கின்மை நிலையிலிருந்து காப்பாற்றாவிட்டால் எதிர்காலத்தில் அவர்களின் மூளை வளர்ச்சி குறைந்து அவர்களின் புத்திசாலித்தனம் குறையும் அபாயம் உள்ளதாகவும் அவர் எசசரித்துள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...