அடுத்த வாரம் முதல் பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகள் பரிசோதிக்கப்படும்!

Date:

அடுத்த வாரம் முதல் பாடசாலை புத்தகப் பைகளை பரிசோதிக்கும் முறையை மீண்டும் அறிமுகப்படுத்த உள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள முன்னணி ஆண்கள் பாடசாலையொன்றில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர், ஆரம்ப கட்ட நடவடிக்கையாக பாடசாலைகளில் பாடசாலைப் பைகளை பரிசோதிக்கும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இனிப்புகள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் போதைப் பொருட்கள் பாடசாலைகளுக்குள் நுழைய வாய்ப்புள்ளதாகவும், பாடசாலை மாணவர்களுக்கு தெரியாமல் போதைப் பொருட்களை விநியோகிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...