அரிசி,பருப்பு உள்ளிட்ட 8 வகையான பொருட்களின் விலை குறைப்பு!

Date:

ச.தொ.ச மூலம் விற்பனை செய்யப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட 8 வகையான பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்புடன் இந்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டதாக அதன் தலைவர் பசந்த யாப்பா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர்,

இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி, இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி, சிவப்பு பருப்பு, வெள்ளை சீனி, துவரம் பருப்பு, பூண்டு மற்றும் கோதுமை மா போன்றவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, குறைந்த வருமானம் பெறும் பெருந்தோட்ட மக்கள் வாழும் பிரதேசங்களில் அமைந்துள்ள ச.தொச. கடைகளின் ஊடாக ஒரு கிலோ கோதுமை மாவை 310 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளை கொண்டைக்கடலை 185 ரூபாவுக்கும், இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை நாடு ஒரு கிலோ 194 ரூபாவுக்கும், ஒரு கிலோ சிவப்பு பருப்பு 429 ரூபாவுக்கும் ஒரு கிலோ வெள்ளை சீனி 279 ரூபாவுக்கும் ச.தொ.ச ஊடாக மக்கள் கொள்வனவு செய்ய முடியும் எனறும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...