கொழும்பு-கண்டி பிரதான வீதியின் ரன்வெல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றிரவு இடம்பெற்ற குறித்த விபத்தில் மேலும் 2 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வேன் ஒன்று 3 மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.