9/11- 21 ஆண்டுகள் நிறைவு: புவி அரசியல் கற்றுத்தரும் பாடங்கள்!

Date:

அமெரிக்க இராணுவத் தலைமையகம் மற்றும் உலக வர்த்தக மையம் என்பவற்றின் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்து நேற்றுடன் 21 வருடங்கள் நிறைவடைகிறது.
21 ஆம் நூற்றாண்டின் நுழைவாயிலில் நடந்த இந்த பயங்கரம் இந்நூற்றாண்டின் அரசியல் முகத்தையே மாற்றிவிட்டது.

சமகால உலக ஆதிக்க அரசியல் கூட்டாளிகளின் அதிகார விளையாட்டுக்கான பிரதான ஆடுகளமாகவும் இது இருந்து வருவதால் இதனை எளிதில் நாம் புறக்கணிக்க முடியாது.

இந்தத்தாக்குதல் குறித்து உலக அரசியல் வல்லுனர்களும் ஆய்வாளர்களும் முன்வைக்கும் சில சுவாரஸ்யஙகளை இங்கு முன்வைப்பது நாம் அதிகார வர்க்கம் குறித்து எடுக்க வேண்டிய சில நிலைப்பாடுகளை இலகுவாக்க உதவலாம்.

உலக வல்லாதிக்க சக்திகளில் மிகப் பலமான புலனாய்வுக் கட்டமைப்பைக் கொண்ட அமெரிக்க தேசத்தின் மத்திய புலனாய்வு மையத்தினால் ( Central intelligence Agency) தமது தேசிய எல்லைக்குள் நடக்கப்போகும் தாக்குதல் குறித்து முன்னுணர முடியாது போனதேன்? ஒரு தாக்குதல் நடந்து 4 மணித்தியால இடைவெளிக்குப் பின்னர்தான் அடுத்த தாக்குதல் நடந்தது. அதனையேனும் முன்னுணர முடியவில்லை என்பதை நம்ப முடியுமா?

உலக வர்த்தக மையத்தில் world trade centre அப்போது எட்டு ஆயிரம் யூதர்கள் பணியாற்றி வந்தனர். தாக்குதல் நடந்த 2000.09.11 அன்று ஒருவர் கூட பணிக்கு சமூகமளிக்கவில்லை.

உலகின் பட்டி தொட்டி எங்கும் மோந்து திரிகின்ற, கண்டம் விட்டு கண்டம் தாவி மோப்பம் பிடிக்கின்ற CIA ற்கு துலங்காத முன்னறிவு எட்டாயிரம் அமெரிக்க யூதர்களுக்கு துலங்கியதெப்படி? தாக்குதல்கள் நடந்து இரண்டு மணி நேரத்தில் ஒவல் அலுவலகத்திற்கு வெளியே இருந்த ஜோஜ் புஷ்ஷை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட் என்ற யூதர் “This is the second pearl harbor attack we must utilize it for our interests ” என்றதன் அர்த்தம் என்ன? தாக்குதல் நடந்து அரை மணி நேரம் முடிவதற்குள் முஸ்லிம்கள் இந்தத்தாக்குதல் குறித்து தமது மகிழ்ச்சி ஆரவாரத்தை தெரிவிப்பது போன்ற ஒரு காட்சியை CNN ஒளிபரப்பியதேன்? சூத்திரதாரிகளை அரைமணி நேரத்தில் CNN இனால் எப்படி கண்டுபிடிக்க முடிந்தது? அந்த சம்பவம் நடப்பதற்கு சில பத்தாண்டுகளுக்கு முன்னர் ஜோர்தான் தலை நகர் அம்மானில் பலஸ்தின அகதிகள் ஊர்வலம் செல்லும் காட்சி அது.

அதை ஹெடோக் என்ற ஒரு யூதனின் தனிச்சொத்தான CNN உடனடியாக ஒளிபரப்பி உலகத்தின் காதுகளுக்கு உரக்கச் சொன்ன செய்தி என்ன? துருக்கிய ஆய்வாளர் அவ்ரஹான் முஹம்மது அலி சொல்வதுபோல் இந்த மர்மமான கேள்விகள் மறைத்து வைத்திருக்கும் ஓர் அரசியல் பேருண்மை உள்ளது.

உலகை குறிப்பாக குறைந்த விலையில் எண்ணெயைக் கொள்ளையிட்டு வந்த அறபுலகை தொடர்ந்தும் வேட்டைக்காடாக வைத்திருக்க வேண்டும் எனில் வொஷிங்டனுக்கு ஒரு புதிய எதிரியைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.

சோவியத் யூனியனின் உடையவை அடுத்து அமெரிக்கா இஸ்லாத்தை ஒரு புதிய எதிரியாய் நிலை நிறுத்தியது.

பயங்கரவாதம் தீவிரவாதம் வன்முறை என்பவற்றை முஸ்லிம்களுடன் மட்டும் முடிச்சுப் போட்டுவிட்டால் தொடர்ந்தும் உலகாதிக்கத்தை இருபத்தோராம் நூற்றாண்டிலும் தம் வசம் வளைத்துப் போடலாம் என்ற சமன்பாட்டில் ஒரு கூறுதான் இஸ்லாம் என்ற புதிய எதிரி.

சமகால உலக புவி அரசியலில் இந்த தாக்குதல் இன்று வரை அதனது விகாரமான தலையை நீட்டிக் கொண்டே இருக்கிறது. 4/21 உம் அதன் பூகோளத் தொடர்ச்சி தான். இந்தத்தாக்குதலை அடுத்து புஷ்ஷும் பிளேயரும் ஆப்கானை வேட்டையாடினர்.

தோறா போறா மலை இடுக்குகளில் தான் இந்தத்தாக்குதலை நடாத்திய பயங்கரவாதிகள் ஓழிந்திருப்பதாக அவர்கள் கதை அளந்தனர். பிரதான சூத்திரதாரி உஸாமா என்றனர்.

அப்பாவி ஆப்கான் மக்கள் செல் வீச்சுகளில் சிதறிப்போயினர். காபூல் ஊடாக பக்தாதுக்கான பாதை தயாராகிறது.

2003 மார்ச்சில் ஈராக் மீது கடும் இராணுவப்பயங்கரவாதத் தாக்குதலை அமெரிக்க கூட்டுப்படை கட்டவிழ்த்தது. பயங்கர குண்டுமழை. அடுத்த பத்தாண்டு ஈராக் அமெரிக்க இராணுவத்தின் சப்பாத்து கால்களுக்கு கீழே மிதிபட்டு துவண்டு போனது.

பத்து இலட்சம் ஈராக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஈராக்கிய விஞ்ஞானிகளை பல்கலை வளாகத்தில் மாணவர்கள் முன்னால் அமரிக்க இராணுவம் கொன்று குவித்தது.

பக்தாத் அருங்காட்சியகத்தை கொள்ளையிட்டது.பல்லாயிரக்கணக்கான ஈராக்கிய பெண்களை வேட்டையாடினர். அபூ கரீப் என்ற பெயரில் ஒரு சித்திரவதைக் கூடத்தை வொஷிங்கன் நடாத்தியது.
அப்பாவி முஸ்லிம்களை அள்ளிக் கொண்டு சென்று அங்கு வதை செய்து வந்தார்கள். ஈராக் மண்ணில் அமெரிக்க காட்டுமிராண்டிகள் செய்த வன்கொடுமைகளை எழுத இந்தப்பக்கம் போதாது.

If it is oil why Iraq? காரணம் அங்குதான் இன்னும் 520 ஆண்டிற்கான எண்ணெய் வயல்கள் உள்ளன. அதனால்தான் சத்தாமை உஸாமாவுடன் முடிச்சுப்போட்டான் புஷ். முடிவில் ஆக்கிரமித்து ஆறு மாதங்களில் ஈராக்கின் ஒட்டுமொத்த எண்ணெயையும் hellibirton என்ற அமெரிக்க கம்பனியின் கீழ் கொண்டுவரப்பட்டது.

பின்னர் ஈராக்கை சுன்னிகள் ஷீயாக்கள் குர்திஸ்களுககென துண்டு போட்டது வொஷிங்டன்.

வளமான எண்ணெய் வயல்களில் 90 விழுக்காட்டைக் கொணட வடக்கு ஈராக் குர்திஷ்களுக்கு தாரை வார்க்கப்பட்டது. இன்று அங்கே இஸ்ரேலும்அமெரிக்காவும் மேய்ந்து வருகின்றன.

9/11 சாதாரணமான ஒரு திட்டமிடல் அல்ல . அதன் தாக்கம் குறைந்தது ஒரு அரை நூற்றாண்டுக்கேனும் இருக்கும். இன்று மேற்கு நாடுகளிலும் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலும் முஸ்லிம் என்றால் பயங்கரவாதி தீவிரவாதி என்ற பிம்பத்தை எளிதில் கட்டமைக்கவும் பெரும்பான்மையின் எதிரிகளாக முஸ்லிம்களை நிலை நிறுத்தி பெரும்பான்மையினர் தனி வாக்குகளால் இனவாதிகள் வெற்றி பெறுவதற்கும் காலமாக அமைந்ததும் 9/11 தான்.

இன்றைய post- truth politics இல் அதாவது பொய்களின் அரசியலில் 9/11 மிக முக்கிய அரசியல் நாடகமாகும்.

இதன் உண்மையான குற்றவாளிகள் இன்னும் வெளியே சுதந்திரமாகச் சுற்றி திரிகிறார்கள் என்பதுதான் வாய்பபுக்கேடானது. ஒருவர் முட்டாள் என்று பட்டம் வாங்கி ஈராக்கில் செருப்பால் எறியப்பட்ட டிஜிடல் ஷைத்தான் ஜூனியர் புஷ்.

மற்றையவன் பிரிட்டிஷ் முன்னாள் மொக்கன் பிளேயர். இரண்டு பேரையும் தூக்கிலிடுவதுதான் அன்றைய தினம் இறந்தவர்களுக்கான செஞ்சோற்றுக் கடனாய் இருக்கும்.

கலாநிதி றவூப் ஸெய்ன்

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...