ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வு ஆரம்பம்: இலங்கை மீதான விவாதம் இன்று

Date:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 51வது அமர்வு இன்று (செப்டம்பர் 12) ஆரம்பமாகி, ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

மேலும், இன்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் அமர்வில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

உள்ளூர் மனித உரிமைகள் நிலைமை பற்றிய விரிவான அறிக்கைக்கு கூடுதலாக 46/1 தீர்மானத்தின் முன்னேற்ற மதிப்பாய்வு நடத்தப்படும்.

ஐ. நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் பிரதிநிதியாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி  மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரும் இந்த அமர்வில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...