சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியத்தின் இடைக்காலத் தலைவராக ஜாபரி தெரிவு

Date:

சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியத்தின் இடைக்காலத் தலைவராக இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஹபீப் ஸாலிம் ஸக்காப் அல் ஜாபரி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய மேற்கு சஹாரா பிராந்தியம் தொடர்பில் எழுந்த முரண்பாடுகளை அடுத்து ஒன்றியத்தின் தலைவர் அஹ்மத் ரைஸூனி கடந்த மாதம் பதவி விலகியிருந்த நிலையில் ஜனவரியில் நடைபெறவுள்ள தலைவர் தேர்வு வரையிலான காலப்பகுதிக்கு ஜாபரி நியமிக்கப்பட்டுள்ளார்.

மொரிடானியாவும் மொரோக்கோவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என தொலைக்காட்சி நேர்காணலொன்றில் ரைஸூனி தெரிவித்த கருத்து சர்ச்சையைக் கிளப்பியதையடுத்து அவர் பதவி விலகினார். இடைக்காலத் தலைமைப் பதவியை ஏற்றுள்ள ஜாபரி ஷரீஆத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவராவார்.

இந்தோனேஷியப் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராகக் கடமையாற்றிய இவர் இந்தோனேஷிய அரசாங்கத்தில் சமூக விவகாரங்களுக்கான அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...