எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதிய கார்: ஒருவர் உயிரிழப்பு!

Date:

கம்பஹா, யாகொட புகையிரத கடவையில் கார் ஒன்று கண்டி – கொழும்பு நகரங்களுக்கு இடையிலான அதிவேக புகையிரதத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

ரயில் கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையில் குறித்த கார் ரயில் பாதையின் குறுக்கே செலுத்தப்பட்டதாக கணேமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் காரின் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பஹா, மேல் யாகொட பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ரயிலில் மோதிய கார், ரயிலுடன் யாகொட நிலையத்திற்குள் வந்தபோது, ​​ரயிலுக்கும் யகொட நிலையத்தின் நடைமேடைக்கும் இடையில் சிக்கிக் கொண்டது.

குறித்த புகையிரத கடவை யாகொட புகையிரத நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்து காரணமாக காருக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், கவனக்குறைவாக ரயில் தண்டவாளத்தில் கார் புகுந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் காரணமாக, பிரதான ரயில் பாதையின் கீழ் ரயில்களில் சிறிது தாமதம் ஏற்பட்ட போதிலும், தற்போது ரயில் இயக்கம் வழமைக்குத் திரும்பியுள்ளது.

Popular

More like this
Related

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று முதல் மீண்டும் கட்டணம் அறவிடப்படும்

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (டிசம்பர் 4) முதல் மீண்டும் கட்டணம் அறவிட...

சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து ஆராய்வு

அனர்த்த நிலைமை காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து...

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம்: சர்வதேச அபிவிருத்திப் பங்காளிகள் கைகோர்ப்பு

டிட்வா சூறாவளிக்குப் பின்னர் நிலைமையை மதிப்பிடுவதற்கும் நிவாரணம், மீட்புப் பணிகள் மற்றும்...

டித்வா சூறாவளியில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு சவூதி அரேபிய தூதரகம் இரங்கல்

'டித்வா' சூறாவளி மற்றும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு...