உயர்தர திரிபோஷ தொடர்ந்து வழங்கப்படும்:சுகாதார அமைச்சர்

Date:

இந்த நாட்டில் உள்ள குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் தொடர்ந்தும் உயர்தர திரிபோஷ மாவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

திரிபோஷ தொடர்பில் அண்மைய நாட்களில் வெளியான உண்மைகளை ஆராய்ந்து கலந்துரையாடுவதற்காக தேசிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சின் அதிகாரிகள் குழுவுடன் சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது, தெற்காசியாவிலேயே குழந்தைகளுக்கு இவ்வாறான ஊட்டச் சத்துக்களை வழங்கும் ஒரே நாடு இலங்கை என்றும் அமைச்சர் கூறினார்.
இதற்கு தேவையான அதிகபட்ச ஒதுக்கீடு திறைசேரியிலிருந்து ஒதுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

திரிபோஷாவுக்கான மூலப்பொருட்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்கு மேலதிகமாக சில தனியார் நிறுவனங்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் திரிபோஷ திட்டத்தில் எந்த செயலிழப்பும் ஏற்படவில்லை என்றும், உணவு பணவீக்கத்தை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...