இந்திய மராட்டிய மாநிலத்தில் வீதி விபத்து: 11 பேர் பலி!

Date:

இந்திய மராட்டிய நாசிக் நகரில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 11 பேரூந்துப் பயணிகள் பலியாகினர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பயணிகள் பேரூந்து, பாரவூர்தி ஒன்றுடன் மோதியபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இரண்டு வாகனங்களும் மோதிய நிலையில் பேரூந்து தீப்பற்றிக்கொண்டதாகவும்,  இதன் காரணமாக பேரூந்தில் இருந்து பயணிகளை வெளியேற்றுவதில் சிரமங்கள் எதிர்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணமானவர்களில் ஒரு குழந்தையும் அடங்கியுள்ளது.

சம்பவத்தில் 32 பேர் வரை காயமடைந்து உள்ளனர் அத்துடன் சிலரின் நிலை கவலைக்கிடமாகவும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...