நடுத்தர வருமானம் பெறும் நாடான இலங்கையை குறைந்த வருமானம் கொண்ட நாடாக வகைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாட்டின் தனிநபர் வருமானம் நாளாந்தம் குறைந்து வருவதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, உலக நிறுவனங்களின் உதவிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் இலங்கையை குறைந்த வருமானம் கொண்ட நாடாக வகைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை குறைந்த வருமானம் கொண்ட நாடாக பிரகடனப்படுத்துவதற்கான குறிப்பிட்ட காலம் தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானத்தை இன்றைய தினம் அறிவிக்குமாறு ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கேட்டுக்கொண்டனர்.
இலங்கையை நடுத்தர வருமானத்தில் இருந்து குறைந்த வருமான நிலைக்குத் தரம் இறக்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல புனவர்தன இன்று காலை வாராந்த அமைச்சரவை மாநாட்டில் தெரிவித்தார்.
இதேவேளை ஜனாதிபதி அலுவலகம் உடனடியாக திருத்தியமைத்தமை அமைச்சரவைக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் விரிசலைக் காட்டுவதாகத் தெரிகிறது.