பாண் விலையை குறைக்க பேக்கரி உரிமையாளர்களின் நிபந்தனைகள்!

Date:

இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் பிரதான நிறுவனங்களான ப்ரீமா மற்றும் செரண்டிப் மாவின் விலையை குறைத்தால், பாண் உள்ளிட்ட ஏனைய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இரண்டு நிறுவனங்களும் மாவின் விலையை குறைக்காததால், அவர்களாலும் விலையை குறைக்க முடியாது என அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன  தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் மொத்த விலையை 85 ரூபாவினால் குறைக்க அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

முன்னதாக, இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கோதுமை மாவின் மொத்த விலை 375 ரூபாவாக இருந்தது. விலை குறைப்புடன், கோதுமை மாவின் புதிய மொத்த விலை கிலோ ஒன்றுக்கு 290 ரூபாவாகும்.

எனினும், இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டாலும், பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பேக்கரி உற்பத்திகளின் விலை குறைப்பு தொடர்பில்  சிறிய மற்றும் நடுத்தர பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினால் அழைப்பு விடுக்கப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது நாடளாவிய ரீதியில் பல்வேறு விலைகளில் கோதுமை மா விற்பனை செய்யப்படுவதால் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை குறைக்க முடியாது என அதன் தலைவர் கமல் பெரேரா தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...