லிட்ரோ நிறுவனத்தின் விசேட அறிவிப்பு!

Date:

லிட்ரோ கேஸ் நிறுவனம் மேலும் ரூ.7.5 பில்லியனை திறைசேரிக்கு திருப்பிச் செலுத்தியுள்ளது.

இதன் காரணமாக நவம்பர் முதல் வாரத்தில் லிட்ரோ எரிவாயுவின் விலை மேலும் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அதன் தலைவர் தெரிவித்தார்.

“லிட்ரோ எரிவாயு நிறுவனம், நாங்கள் உறுதியளித்தோம், உலக வங்கியிலிருந்து பெறப்பட்ட கடன் தொகை இன்னும் பெறப்படுகிறது. ஆனால் எரிவாயு நெருக்கடியைத் தீர்க்க நாங்கள் ஆரம்ப பங்குகளைப் பயன்படுத்தினோம். நாங்கள் மீண்டும் ரூபாயில் செலுத்தத் தொடங்கினோம். செப்டம்பரில் நாங்கள் 6.5 பில்லியன் செலுத்தினோம். ஒக்டோபரில் 7 பில்லியன் சொலுத்தினோம். வெள்ளிக்கிழமை இறுதிக்குள் மேலும் 7.5 பில்லியனை செலுத்திவிட்டோம். லிட்ரோ எரிவாயு நிறுவனம் என்ற வகையில் இது எங்கள் பொறுப்பு. எஞ்சியுள்ள கடனை டிசம்பர் மாதத்திற்குள் செலுத்திவிடுவோம் என நாங்கள் நம்புகிறோம். குறிப்பாக இந்த நேரத்தில், உலக சந்தையில் எரிவாயு விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை நாங்கள் அவதானித்து வருகிறோம். அதன்படி, நவம்பர் மாத தொடக்கத்தில் எரிவாயு விலையை மீண்டும் குறைப்பது குறித்து யோசித்து வருகிறோம்” என முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 05ஆம் திகதி 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 271 ரூபாவால் குறைக்கப்பட்டது.

12.5 லிட்டர் சமையல் எரிவாயு சிலிண்டர் தற்போது 4,280ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: அனல் பறந்த பிரசாரம் நிறைவு! நாளை வாக்குப் பதிவு!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள...

அஸ்வெசும நலன்புரித் திட்ட ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும (Aswesuma) நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு இன்றைய...