உலகக் கோப்பையைக் காண கத்தாருக்கு தனியாக காரில் செல்லும் பெண்!

Date:

கத்தாரில் நடக்கும் FIFA உலகக் கோப்பை கால்பந்தாட்டம் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியை காண கேரளா மாநிலம் மாஹேயை சேர்ந்த நாஜி நௌஷி என்ற ஐந்து குழந்தைகளுக்கு தாயான பெண் தனியாக சாலை மார்க்கமாக கத்தார் செல்ல திட்டமிட்டுள்ளார்.

அதற்காக மஹேந்திரா தார் ஜீப்பை தயார் செய்து பயணத்தை தனியாக தொடங்கியுள்ளார்.

கால்பந்தின் திவீர ரசிகையும் , யூடியூபரும் ஆன நாஜி நௌஷி, கத்தார் நோக்கி தனது பயணத்தைத் தொடங்கினார்.

கோயம்புத்தூர் வழியாக மும்பையை அடைந்த பிறகு, அவர் தனது வாகனத்துடன் கப்பல் மூலம் ஓமனில் தரையிறங்குவார்.

அதன் பின்னர் அவர் சாலை வழியாக பயணம் செய்து கத்தாரை  ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத் மற்றும் சவுதி அரேபியா வழியாக சென்று அடைவார்.

கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் முன்னிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் ஆண்டனி ராஜு இந்த பயணத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

Popular

More like this
Related

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் வெளியீட்டு விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ரஷ்ய தூதுவர் இடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர்,...

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...