உலகக் கோப்பையைக் காண கத்தாருக்கு தனியாக காரில் செல்லும் பெண்!

Date:

கத்தாரில் நடக்கும் FIFA உலகக் கோப்பை கால்பந்தாட்டம் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியை காண கேரளா மாநிலம் மாஹேயை சேர்ந்த நாஜி நௌஷி என்ற ஐந்து குழந்தைகளுக்கு தாயான பெண் தனியாக சாலை மார்க்கமாக கத்தார் செல்ல திட்டமிட்டுள்ளார்.

அதற்காக மஹேந்திரா தார் ஜீப்பை தயார் செய்து பயணத்தை தனியாக தொடங்கியுள்ளார்.

கால்பந்தின் திவீர ரசிகையும் , யூடியூபரும் ஆன நாஜி நௌஷி, கத்தார் நோக்கி தனது பயணத்தைத் தொடங்கினார்.

கோயம்புத்தூர் வழியாக மும்பையை அடைந்த பிறகு, அவர் தனது வாகனத்துடன் கப்பல் மூலம் ஓமனில் தரையிறங்குவார்.

அதன் பின்னர் அவர் சாலை வழியாக பயணம் செய்து கத்தாரை  ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத் மற்றும் சவுதி அரேபியா வழியாக சென்று அடைவார்.

கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் முன்னிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் ஆண்டனி ராஜு இந்த பயணத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

Popular

More like this
Related

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு Amazon உயர்கல்வி நிறுவனம் அனாதை இல்லத்திற்கு விஜயம்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு Amazon உயர்கல்வி நிறுவனம் 2025.10.5 திகதி...

டிரம்ப்புக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டதற்கு வெள்ளை மாளிகை கடும் எதிர்ப்பு!

தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள வெனிசுவேலாவில் மக்களின் ஜனநாயக உரிமைகளை...

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...