தபால் ஊழியர்களின் பற்றாக்குறையால் தபால் சேவை நெருக்கடி!

Date:

தபால் ஊழியர்களின் பற்றாக்குறையால் எதிர்காலத்தில் கடிதங்களை வழங்குவதில் தாமதம் ஏற்படக்கூடும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது, ​​வெற்றிடமாக உள்ள தபால் ஊழியர்களின் எண்ணிக்கை, 2,000 ஆக உள்ளது.

8,600 தபால் ஊழியர்கள் அங்கீகரிக்கப்பட்ட போதிலும், தற்போது 6,500 பேர் மட்டுமே கடமையாற்றுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 31ம் திகதி, கிட்டத்தட்ட 100 போஸ்ட் மாஸ்டர்கள் ஓய்வு பெறுவார்கள்.

தபால் மாஸ்டர் பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளதால், அஞ்சலகங்களின் பணிகள் கடும் இடையூறுகளுக்கு மத்தியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதன்காரணமாக அந்த அலுவலகங்களில் கடித விநியோகம் மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்கு ஏற்கனவே தடைகள் ஏற்பட்டுள்ளதாக திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் நிறுவப்பட்ட தபால் நிலையங்களின் எண்ணிக்கை 654 ஆகும். கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் மட்டும் பணிபுரியும் தபால் ஊழியர்களின் எண்ணிக்கை 1000ஐ நெருங்குகிறது.

2016 ஆம் ஆண்டு முதல் தபால் ஊழியர்கள் எவரும் பணியமர்த்தப்படவில்லை என சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...

சதாம் உசேன் முதல் அலி கமேனி வரை: அமெரிக்காவின் இரட்டை வேடமும் சர்வதேச நீதியும்.

'அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர்களை 'மரணித்தவர்கள்' என்று கூறாதீர்கள். ஏனெனில் அவர்கள் உயிருடனேயே...

இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் விஜித ஹேரத்!

‘ரைசினா கலந்துரையாடல் 2026’ (Raisina Dialogue 2026) மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா...

ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில்...