ஹிக்கடுவ துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி: முதல் ஒன்பது மாதங்களில் 32 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவு!

Date:

ஹிக்கடுவ, திராணகம சந்தியில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த இருவர்  காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 32 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 36 பேர் கொல்லப்பட்டதாகவும் காவல்துறை கூறியது.

மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இடம்பெறும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய விசேட குற்றச்செயல்களை தடுப்பதற்காக சில நாட்களுக்கு முன்னர் தென் மாகாணத்தில் புதிய பொலிஸ் பிரிவும் ஸ்தாபிக்கப்பட்டது.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...