ஆதரவற்ற முஸ்லிம் சிறுவர்களின் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி மள்வானையில் ஆர்ப்பாட்டம்!

Date:

மாகொல முஸ்லிம் ஆதரவற்ற பராமரிப்பு நிலையத்தின் சொத்துக்கள், தனி நபர்களுக்கு வழங்க முயற்சிக்கப்படுவதாக கூறி, மள்வானையில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று (6) முன்னெடுக்கப்பட்டது.

மள்வானை அல் முபாரக் தேசிய பாடசாலைக்கு முன்பாக  ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் பேரணியாக, கராபுகஸ் சந்தி ஊடாக உலஹிட்டிவலவில் அமைந்துள்ள , மாகொல முஸ்லிம் அநாதைகள் நிலையத்தின் மள்வானை கிளை வரை சென்றது.

குறித்த ஆதரவற்ற  நிலையத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டை ஏற்பாடுச் செய்திருந்தனர்.

‘ இலங்கை முஸ்லிம் அநாதைகளின் எதிர்க்காலத்தை வளமாக்குவோம்’ எனும் தொனிப் பொருளின் கீழ் இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், குறித்த நிலையத்தின் தற்போதைய நிர்வாக சபை,  நிலையத்தின் சொத்துக்களை விற்பனை செய்து, அந் நிலையத்தை அழிவுப் பாதைக்கு இட்டு செல்வதாக பழைய மாணவர்களால்  குற்றம் சுமத்தப்பட்டது.

நிர்வாக சபைக்கு எதிராக பல்வேறு பதாதைகளை ஏந்தி இவ்வார்ப்பாட்டம் நடாத்தப்பட்டதுடன் , தொம்பே மற்றும் பியகம பொலிசாரினால் ஆர்ப்பாட்டத்துக்கு பாதுகாப்பளிக்கப்பட்டது.

இந் நிலையில், மாகொல முஸ்லிம் அநாதைகள் நிலையத்தின் நிர்வாக சபையை பதவி விலகுமாறு வலியுறுத்தியும், புதிய நிர்வாக சபை ஒன்றினை தெரிவு செய்வதற்கான சூழலை ஏற்படுத்துமாறு கோரியும், இதன்போது மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...