தேசிய மட்டத்தில் எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா விற்கு முதலாமிடம்!

Date:

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வழிக்காட்டலுடன் பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலக மட்டத்தில் நடாத்தப்பட்ட இலக்கியப் போட்டித் தொடரில் வெற்றியாளர்களிடையே தேசிய மட்டத்தில் வெற்றிப்பெற்ற வெற்றியாளர்களுக்காக 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய இலக்கிய விருது வழங்கும் நிகழ்வு 17.11.2022 அன்று வியாழக்கிழமை மு.ப. 10.00 மணிக்கு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமையில் கொழும்பு 07, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது.

இந்நிகழ்வில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த தேசிய இலக்கியப் போட்டிக்காக திறந்த சிறுவர் கதையாக்கப் போட்டியிப் பிரிவில் “பறக்கத் தெரியாத பறவைகள்” எனும் தலைப்பில் சிறுவர் கதை ஆக்கத்தை முன்வைத்து முதலாம் இடத்தைப் பெற்றமைக்காக பேராசிரியர் பிரனீத் அபேசுந்தர  அவர்களது கரங்களால் பஸ்யால மே.மா/மினு/எல்லலமுல்ல ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபரும் கவியரசியுமான செய்யது அஹமது இஸ்மத் பாத்திமா அவர்கள்  தேசிய இலக்கிய விருது வழங்கலின் போது தங்கப்பதக்கமும், பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான காசோலை மற்றும்  சான்றிதழ் என்பன வழங்கி கெளரவிக்கப்பட்டது.

புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சரும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ விதுர விக்கிரமநாயக்க அவர்களும் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருமான திருமதி தரணி அனோஜா கமகே அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Popular

More like this
Related

2026 ஜூலையில் இலங்கையின் பணவீக்கம் 7.2 சதவீதமாக உயர்வு!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் கணக்கிடப்பட்ட இலங்கையின் பிரதான பணவீக்க...

வரலாற்றுச் சாதனை: சர்வதேச திருக்குர்ஆன் போட்டியில் முதலிடம் பிடித்து நைஜீரிய பெண் மாபெரும் பெருமை!

சவூதி அரேபியாவின் மக்கா நகரில் நடைபெற்ற 46வது 'அப்துல் அஜீஸ் மன்னர்...

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்

நடிகை சௌகார் ஜானகி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். நடிகை சௌகார்...

சர்வதேச திருக்குர்ஆன் போட்டியில் இலங்கைக்கு 3ஆவது இடம்: சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் வாழ்த்து!

சவூதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள புனித ஹரம் ஷரீஃபில் நடைபெற்ற...