‘வருட இறுதிக்குள் உள்ளூராட்சி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படலாம்’

Date:

இந்த வருடத்தின் இறுதிக்குள் தேர்தல் தொடர்பான அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு வெளியிடும் என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அதேநேரம் உள்ளூராட்சி தேர்தலை எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால் காலம் தாழ்த்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்லை நிர்ணய குழு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு ஏதுவாக செயற்படுகின்றது என்ற குற்றச்சாட்டுகள் குறித்து தெளிவுபடுத்தும் போதே மஹிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவிற்கு மேல் நாடாளுமன்றமும் நீதிமன்றமும் காணப்படுகின்றது, எனவே எல்லை நிர்ணய குழுவின் ஊடாக உள்ளுராட்சித் தேர்தலை காலம் தாழ்த்த முடியும் என கூறுவதில் அர்த்தமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் புதிய உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும், அல்லது பெப்ரவரி இறுதி வாரத்திற்குள் தேர்தல் நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட வேண்டியது கட்டாயம் என்றும் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை மெட்ரோ பேருந்து!

எதிர்வரும் நாட்களில் புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளதுடன், ஆண்டின் இறுதிக்குள்...

புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு சலீம் ஆசிரியரை தலைவராகக் கொண்ட புதிய நிர்வாக சபை தெரிவு.

நேற்று புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கான புதிய நிர்வாக சபை தெரிவுக்குரிய நிகழ்வுகள்...

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு!

2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு...

இன்று மழை மற்றும் காற்றுடனான வானிலை நிலவும்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடனான வானிலை...