மஜ்மா நகர் கோவிட் மையவாடிக்கு பாதுகாப்பு வேலி!

Date:

ஓட்டமாவடி கோரளைப்பற்று பிரதேச சபை நிர்வாக எல்லைக்குள் அமைந்துள்ள மஜ்மா நகர் சூடுபத்தியசேனை கொவிட் ஜனாஸா மையவாடிக்கான யானைத் தடுப்பு சுற்று வேலி வேலைகள் தேசிய முஸ்லிம் சபையின் (NMA) அனுசரணையுடன் கோவிட் ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் தேசியத் தலைவரும், பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அல்ஹாஜ் அப்ஸல் மரிக்கார் அவர்களினால் நேற்று (2022.12.04) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் இரண்டாம் கட்டமாக பாதுகாப்பு மதிலும், மூன்றாம் கட்டமாக வெளி இடங்களிலிருந்து ஜியாரத் செய்ய வருவோருக்கான அடிப்படை வசதி மண்டபத்தையும் நிர்மாணிப்பதற்கான முடிவும் எடுக்கப்பட்டது.
அதேவேளை கோவிட் ஜனாஸா மரணங்கள் சம்பந்தமான வரலாற்றுப் பதிவொன்றை எதிர்கால சந்ததிகளின் தெளிவிற்காக புத்தகவடிவில் கொண்டுவருவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கோரளைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் கெளரவ நெளபர்,  செயலாளர் சிஹாப்தீன், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், மத்திய மாகாண கோவிட் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் சித்தீக் (கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர்), உப தலைவர்  சப்பான் – உடுநுவர பிரதேச சபை உப தவிசாளர், செயலாளர் ஹிதாயத் சத்தார் – முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர், இணைச் செயலாளர் நளீர், பொருளாளர் ரூமி இவர்களுடன் மர்ஹூம் M H M அஷ்ரப் அவர்களின் புதல்வர் அமான் அஸ்ரப் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...