‘நேர்மைக்கு மகுடம்’: 2022/23 விருதுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

Date:

பொதுமக்களின் நலனுக்காக தம்மை அர்ப்பணித்து பணியாற்றக்கூடிய நேர்மையான அரச ஊழியர்களை இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) 2022/23க்கு பரிந்துரைத்து, நாட்டில் இடம்பெறுகின்ற ஊழல் செயற்பாடுகளை தடுக்க கைகோர்க்குமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனமானது அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கிறது.

சமூக மட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்திய  அரச உத்தியோகத்தர்கள் பற்றி உங்களுக்குத் தெரியும்  எனில்,  உங்களுக்குரிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

ஐந்து வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய மற்றும் தனது சேவையிலிருந்து ஓய்வு பெற இன்னும் குறைந்தது ஐந்து வருட சேவைக் காலத்தினைக் கொண்ட நிரந்தர அரச ஊழியர்கள் அனைவரும் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது இத்தகுதியுடைய அரச ஊழியர்களை குறித்த விருதுக்கு பரிந்துரைக்கலாம்.

விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்தவுடன் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் சுயாதீன நடுவர் குழுவினால் மதிப்பாய்வு மற்றும் நேர்காணல்கள் செய்யப்பட்டு தகுதி வாய்ந்த இறுதி 10 விண்ணப்பதாரிகள் தெரிவுசெய்யப்படுவார்கள்.

எதிர்வரும் 2023 ஜனவரி 31ம் திகதிக்கு முன்னர் உங்களது விண்ணப்பங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்

விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ள: www.integrityicon.lk அல்லது
தொடர்பு கொள்ளுங்கள் 0711 295 295/ 0763223442 / icon@tisrilanka.org.
இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) 2022/23 – நேர்மையின் மீது ஓர் ஒளி பிரகாசிக்கட்டும்! இத்தகவலை பிறருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...