எதிர்வரும் தேர்தலில் மொட்டுக் கட்சியுடன் ஒன்றிணையும் ஐ.தே.க?

Date:

எதிர்வரும் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவது தொடர்பில்  மொட்டுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் கலந்துரையாடுவதற்கு தயாராகி வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரதமர் தலைமையிலான  மக்கள் ஐக்கிய முன்னணி, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி கூட்டணியும், பிள்ளையான் தலைமையிலான டி.எம்.வி.பி கட்சியும் எதிர்வரும் தேர்தலில் மொட்டுக் கட்சியுடன் இணைந்து போட்டியிட ஏற்கனவே தயாராக உள்ளன.

இது தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல் கடந்த சனிக்கிழமை  இடம்பெற்றதுடன், கலந்துரையாடலின் பின்னர் நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுமாறு மொட்டுக் கட்சி ஏற்கனவே உத்தியோகபூர்வமற்ற முறையில் அழைப்பு விடுத்துள்ளதாக ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி இம்மாத இறுதிக்குள் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...