‘மனங்கவரும் ஏற்பாடுகள்’:கத்தாரைப் புகழ்கிறார் பிரான்ஸ் விளையாட்டமைச்சர்: அரை இறுதிப் போட்டியைக் காண மக்ரோனும் கத்தாரில்

Date:

கத்தாரின் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி ஏற்பாடுகள் மனதைக் கவரும் வண்ணம் அமைந்திருப்பதாக பிரான்ஸின் விளையாட்டமைச்சர் அமெலி ஓடே கஸ்டேரா தெரிவித்துள்ளார்.

போட்டியின் ஆரம்பத்தின் போது கத்தார் அமீர் (ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி) ஹலோ எவ்ரிவன் என அனைவரையும் விளித்ததை மறக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய இந்த நிகழ்வை சிறப்பாக ஒழுங்கு செய்தமைக்காக கத்தாரை நாம் பாராட்டுகிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.

கத்தாரில் நடைபெற்ற 2022 உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வுகளில் இவர் கலந்து கொண்டிருந்தார்.

பிரான்ஸ் அணி மொரோக்கோ அணியுடன் இன்று நடைபெறவுள்ள அரை இறுதிப் போட்டியில் மோதவுள்ளது.

இந்தப் போட்டிகளைக் காணவென பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் இன்று கத்தாருக்குப் புறப்படவுள்ளார்.

விளையாட்டை அரசியலாக்கக் கூடாது என முன்னதாக மக்ரோன் தெரிவித்திருந்தார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...