பிரபல தொழிலதிபர் கொலை: 20க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகள் சரிபார்ப்பு!

Date:

தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் கொலை தொடர்பான தகவல்களைக் கண்டறிய அவர் பயணித்த வீதியைச் சுற்றியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகள் சரிபார்க்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய 5 பொலிஸார் கொண்ட குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதுதவிர,  ஷாப்டரின் கையடக்கத் தொலைபேசியில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பில் தொலைபேசி நிறுவனங்களின் ஆதரவுடன் தனித்தனியாக விசாரணை நடத்தப்படும் என பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொலை சம்பவம் தொடர்பில் கிடைத்த சில தகவல்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வியாழன் பொரளை மயானத்திற்கு அருகில் தினேஷ் ஷாப்டரின் மரணம் கழுத்து நெரிக்கப்பட்ட சம்பவம் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால  காலவரையறைகள் குறித்து பொலிஸ்...

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...