நாட்டின் சில பகுதிகளில் காற்றின் தரம் மீண்டும் குறைந்தது!

Date:

கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களில் காற்றின் தரம் இன்று மீண்டும் குறைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி,  கொழும்பு மற்றும் கம்பஹா காற்றின் தரக் குறியீடு (AQI) 150க்கு மேல்  காணப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த பகுதிகளில் வசிப்பவர்கள் உடல்நல பாதிப்புகளை சந்திக்க நேரிடும் அதே வேளையில் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் போன்ற உணர்திறன் கொண்ட குழுக்கள் கடுமையான உடல்நல பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

எவ்வாறாயினும், யாழ்ப்பாணம், புத்தளம், பதுளை மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் வார இறுதியில் குறைந்த காற்றின் தரம் மேம்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

காற்றுடன் இந்தியாவில் இருந்து வெளியேறும் மாசுபட்ட காற்றின் விளைவாக இலங்கையின் காற்றின் தரம் குறைந்துள்ளது என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது.

கடந்த சில நாட்களாக குறிப்பாக மழையுடன் கூடிய வானிலையுடன் காற்றின் தரம் ஏற்ற இறக்கமாக உள்ளது.

Popular

More like this
Related

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் ஷம்மி சில்வா?

அரசாங்கத்தின் உயர்மட்டங்களில் அதிகரித்து வரும் அழுத்தம் மற்றும் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளுக்கு...

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் கைது!

காணி தகராறு ஒன்றில் பெண்களை துப்பாக்கியை கட்டி மிரட்டியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்...

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு.

வடக்கு ஜப்பானில் திங்கட்கிழமை அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. ஜப்பானில் கடந்த ஒரு வாரத்திற்கு...

விமான நிலையத்தில் போதைப்பொருள் பறிமுதல்: கைது செய்யப்பட்ட 22 பௌத்த பிக்குகளுக்கு மே 2 வரை விளக்கமறியல்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது...