சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மெஸ்ஸிக்கு அணிவிக்கப்பட்ட புதிய அங்கி : அரபு நாடுகளில் முக்கியஸ்தர்களுக்கு மட்டுமே அணிவிக்கப்படும்!

Date:

கத்தார் ஆட்சியாளரும் பிபா கூட்டமைப்பின் தலைவர் இருவரும் இணைந்து மெஸ்ஸிக்கு அரபிய அங்கியான bishtஐ அணிவித்து உலகக் கோப்பையை வழங்கியமை புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இதன் மூலம் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான மெஸ்ஸிக்கு உலகக் கோப்பை கனவு நனவாகியுள்ளது .

மேலும், உலகக் கோப்பையில் 5 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்ற ஒரே வீரர் என்ற மகத்தான சாதனையை மெஸ்ஸி படைத்தார். இதன் மூலம், கத்தார் உலகக் கோப்பையில் சிறந்த வீரருக்கான தங்கப் பந்து (Golden Ball) விருதையும் அவர் வென்றார். 2014-ஐ தொடர்ந்து இரண்டாவது முறை GOLDEN BALL விருதை முத்தமிட்டார் மெஸ்ஸி.

அரபு நாடுகளில் மிக முக்கியஸ்தர்களுக்கு மட்டுமே இந்த அங்கி மரியாதை வழங்கப்படும். இருந்தாலும் தங்கள் அணியின் ஜெர்சியே ஒரு வீரருக்கு உயிர் போன்றதாகும்.

தங்கள் அணியை தங்கள் நாட்டை அடையாளப்படுத்தும் ஜெர்சியை மறைக்கும் விதமாக அதன் மேல் இந்த சிறப்பு அங்கியை அணிவித்ததை ஏற்க முடியாது எனப் பலரும் கருத்து தெரிவித்து விமர்சித்து வருகின்றனர்.

கத்தார் ஆட்சியாளரும் பிபா கூட்டமைப்பின் தலைவர் இருவரும் இணைந்து மெஸ்ஸிக்கு அரபிய அங்கியான bishtஐ அணிவித்து உலகக் கோப்பையை வழங்கினர்.

மெஸ்ஸிக்கு அணிவிக்கப்பட்ட இந்த அங்கி புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. மெஸ்ஸியை  கௌரவிக்கும் விதமாகவே இந்த அங்கி அவருக்கு அணிவிக்கப்பட்டது.

அதேவேளை, மெஸ்ஸி கோப்பையை பரிசாக பெற்ற பின்னரும் தனக்கு வழங்கப்பட்ட அந்த கௌரவத்தை மதிக்கும் விதமாக அங்கியை கழற்றாமல் வெற்றிகொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...