‘இலங்கையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும்’

Date:

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என பேராசிரியர் நீலிக மாலவிகே தெரிவித்துள்ளார்.

சீனாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான கடும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து பெருமளவு பரவல் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக சர்வதேச அளவில் பெருந்தொற்று அச்சுறுத்தல் குறித்து நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளதாக நீலிக மாலவிகே தெரிவித்துள்ளார்.

வெவ்வேறு வைரஸ்கள் தோன்றக் கூடிய ஆபத்துள்ளது என்றும் எனவே கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதிய கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தால் 2020 போன்ற சூழ்நிலை ஏற்படும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை தற்போது சீனாவில் பரவி வரும் புதிய அலை காரணமாக நோய் தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக தொடங்குமாறு இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்ஷுக் மாண்ட்வியா, அந்நாட்டு சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

*வெலிகமவில் ஆரம்பமான ‘Made in Sri Lanka’ கண்காட்சி*

உள்நாட்டு உற்பத்திகளை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்தும் ‘Made in Sri Lanka’...

2026 வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் பெப்ரவரி ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம்...

டிசம்பர் 29 முதல் நாட்டின் பல பகுதிகளில் மழை

டிசம்பர் 29 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் கிழக்கிலிருந்தான மாறுபட்ட...