சவுதி அரேபியாவின் அல்-நாசர் அணியில் இணைகிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

Date:

போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ கிளப் அரங்கில் கடைசியாக மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக பங்கேற்றார். உலக கோப்பை தொடருக்கு முன் இதில் இருந்து விலகினார். புதிய அணியில் இணைய பேச்சுவார்த்தை நடந்தது. தற்போது சவுதி அரேபியாவின் அல்–நாசர் அணிக்காக இரண்டரை ஆண்டு ஒப்பந்தத்தில் ரொனால்டோ விளையாட ஒப்பந்தம் ஆனார்.

தற்போது துபாயில் உள்ள இவர், வரும் ஜன. 1 முதல் இந்த அணிக்காக விளையாட உள்ளார். இதற்காக ஆண்டுக்கு ரூ. 1793 கோடி தர முன்வந்துள்ளது அணி நிர்வாகம். இதையடுத்து ரொனால்டோவின் மாத சம்பளம் ரூ. 149 கோடியாக இருக்கும். வார சம்பளம் ரூ. 34.5 கோடி வரை கிடைக்கும்.

வரும் 2030ல் உலக கோப்பை கால்பந்து தொடரை சொந்த மண்ணில் நடந்த சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது. இதற்கு முன் உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ரொனால்டோவை ஒப்பந்தம் செய்துள்ளது.

Popular

More like this
Related

‘சமநீதி’ மாதாந்த சஞ்சிகை வெளியீட்டு விழா நாளை கொழும்பில்

'சமநீதி' (Equity) என்ற பெயரிலான புதிய மாதாந்த சஞ்சிகையொன்று இம்மாதம் முதல்...

‘சிசு செரிய’ சேவையை மேலும் விரிவுபடுத்த அரசாங்கம் தீர்மானம்!

பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவையை முறைப்படுத்துவது தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு...

மலேசியாவின் பகாங் மாநிலத்தில் புனித குர்ஆன் பல்கலைக்கழகம் உருவாக்கம்: சுல்தான் அப்துல்லா வரலாற்று அறிவிப்பு!

மலேசியாவின் பகாங் (Pahang) மாநிலத்தில் குர்ஆனியக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில், 'புனித...

சாரதி அனுமதிப் பத்திர விண்ணப்பதாரர்களில் 8% பேருக்கு உடல்நலக் குறைபாடு.

இலங்கையில் சாரதி அனுமதிப் பத்திரம் (Driving License) கோரி விண்ணப்பித்தவர்களில் சுமார்...