தமிமுன் அன்சாரி அவர்களின் ‘புயலோடு போராடும் பூக்கள்’ நூல் வெளியீடு சிங்கப்பூரில்..!

Date:

இந்தியாவின் தமிழ்நாட்டின் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் இலக்கியவாதியுமான மு.தமிமுன் அன்சாரி அவர்கள் எழுதிய ‘புயலோடு போராடும் பூக்கள்’ என்ற கவிதை நூலின் அறிமுக நிகழ்வு சிங்கப்பூரில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 7.30 மணிக்கு ஆனந்தபவன் உணவகம் சையது ஆல்வி சாலை (முஸ்தபா சென்டர் எதிரில்) இந்த நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

தமிமுன் அன்சாரி அவர்கள் எழுதிய ‘புயலோடு போராடும் பூக்கள்’ என்ற கவிதை நூல் அண்மையில் ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜாவில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து தற்போது சிங்கப்பூரிலும் நூலின் அறிமுக நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

டெங்குவை ஒழிக்க விசேட வேலைத்திட்டம்

மழையுடனான வானிலை காரணமாக டெங்கு பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு...

அனர்த்த நிவாரணத்துக்கு பங்களிப்பு செய்த கொழும்பு பெரிய பள்ளிவாசல்!

தித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கொழும்பு பெரிய பள்ளிவாசல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் அதிக மழை!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று...

டொரோண்டோ தமிழ் புத்தக அரங்கம் 2025; தமிழ் மொழி மற்றும் இலக்கிய பயணத்தின் புதிய தொடக்கம்

2025 டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய திகதிகளில் கனடாவின் டொரோண்டோ...