தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பாக நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

Date:

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகளுக்காக தடயவியல் அறிக்கைகளை கோருமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய நேற்று உத்தரவிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் முன்னிலையாகி விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் பின்வரும் உத்தரவை பிறப்பித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாலும், நிபுணர் அறிக்கைகளை பெற்றுக்கொள்வது அவசியமானதாலும் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு தேவையான உத்தரவுகளை பிறப்பிக்குமாறு கோரியுள்ளது.

இதேவேளை இந்த மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

எனவே, குற்றம் நடந்த இடத்தில் கிடைத்த வயர் கேபிள்கள், ரத்தக்கறை படிந்த துணி, தினேஷ் ஷாப்டரின் விரல் நகங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை தடயவியல் ஆய்வாளருக்கு அனுப்பி வைக்குமாறு நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டனர்.

அதுமட்டுமின்றி தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கையும் இன்று (02) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...