இளைஞர் பிரதிநிதித்துவ விவாதம் கோரி சபாநாயகருக்கு கடிதம்!

Date:

பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளில் இளைஞர் பிரதிநிதித்துவத்துக்கான இரண்டாவது விவாதத்திற்கான தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணையை எடுத்துச் செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்குஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற மற்றும் மாகாண சபை தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கான பரிந்துரைகளை அமைச்சு வழங்காததாலும், அவற்றுக்கான கால அவகாசம் அன்றைய தினம் முடிவடையவுள்ளதாலும், ஜனவரி 14 ஆம் திகதிக்கு பின்னரான ஒரு நாளில் உரிய விவாதத்தை நடத்துமாறு இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் 25% இளைஞர் பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கான தனியார் உறுப்பினர்களின் முன்மொழிவுகளில் இருந்து உள்ளூராட்சி பிரதிநிதித்துவத்திற்கான அமைச்சின் பரிந்துரை நேற்று (05) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...