அமைச்சகங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை குறைப்பு!

Date:

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அனைத்து அமைச்சுக்களும் ஒதுக்கப்பட்ட நிதியில் 5 சதவீதத்தை குறைக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்  பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திறைசேரி இந்த வருடம் எதிர்பார்த்ததை விட மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்ததாகவும், அந்த நிலையை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவதில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், ஜனவரியில் சமுர்த்தி கொடுப்பனவு வழங்குவதும் ஓரிரு வாரங்கள் தாமதமாகலாம் எனவும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

நான்கு இலட்சத்தை கடந்த தங்க விலை!

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று...

மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும்...

போதைக்கு அடிமையானவர்கள் தமது விருப்பத்துடன் புனர்வாழ்வு பெற நடவடிக்கை

போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது விருப்பத்துடன், புனர்வாழ்வு பெறக்கூடிய பத்து மையங்கள்...

கட்டுநாயக்க விமான நிலைய Check-in நேரத்தில் மாற்றம்

இன்று (17) நண்பகல் 12.00 மணி முதல் அமுலாகும் வகையில் கட்டுநாயக்க...