‘சாரதிகள் வாகனம் ஓட்டும் போது மது, போதைப் பொருட்களை பயன்படுத்துகின்றனர்’

Date:

வாகன சாரதிகளில் சுமார் 10 சதவீதமானோர் போதையில் வாகனங்களை ஓட்டிச் செல்வது கண்டறியப்பட்டுள்ளது, மேலும் சிலர் போதைப்பொருளை பயன்படுத்துவதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் (NTMI) தலைவர் சவேந்திர கமகே தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர்களில் பெரும்பாலோர் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் மிதமான வருமானம் ஈட்டுபவர்கள் கனரக வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பேருந்து ஓட்டுனர்களும் மது, போதைக்கு அடிமையானவர்களா என்பதை கண்டறிய சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கனரக வாகன ஓட்டிகளை பரிசோதிக்கும் முன்னோடித் திட்டம் கடந்த ஆண்டில் நடத்தப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளதுடன்  திட்டத்தைத் தொடர்வதாக இருந்த போதிலும், இந்த நோக்கத்திற்காக தேவைப்படும் நிதி போதுமானதாக இல்லை என்று சவேந்திர கமகே கூறினார்.

மேலும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (2021) பதவி வகித்த காலத்தில், புதிய சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதற்கு எதிர்பார்த்திருந்த சாரதிகளுக்கும், உரிமம் புதுப்பித்தலின் போதும் மருத்துவப் பரிசோதனைகள் கட்டாயமாக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கை ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபனத்தின் 7 புதிய தயாரிப்புகள் நாளை அறிமுகம்!

நாளை (30) முற்பகல் 10.00 மணிக்கு நாவின்ன ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபன...

இலங்கையில் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை!

ஓர் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் சாதனை...

கொழும்பு மாநகர சபையின் வரவு, செலவுத்திட்டம் மீண்டும் 31 இல்

கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் இரண்டாவது வாசிப்புக்காக...

அரபு மொழிக்கான ‘தோஹா வரலாற்று கலைக்களஞ்சியம் பணிகள்’ பூர்த்தி!

12 ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் தொகுப்பு முயற்சிகளின் பயனாக,...