யாழ்ப்பாணத்தில் பல வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

Date:

யாழ்.மாவட்டத்தில் சில அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 157 வேட்பு மனுக்களில் 150 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு 7 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக வல்வெட்டித்துறை நகர சபை மற்றும் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை ஆகியவற்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

வேலணை பிரதேச சபையில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்புமனு முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையில் பகுதியளவிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

வேலணை பிரதேச சபையில் தமிழ் மக்கள் கூட்டமைப்பின் வேட்புமனு முழுமையாகவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் பகுதியளவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊர்காவற்றுறை பிரதேச சபையில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் புதிய லங்கா நிதாஹஸ் பக்ஷயவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் எதுவும் நிராகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ரமழானை முன்னிட்டு பேரீச்சம்பழத்திற்கு வரிச்சலுகை

ரமழான் நோன்பு காலத்தில் இலவசமாக விநியோகிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழத்துக்கு வரிச்சலுகையை...

இஸ்ரேலில் இலங்கையர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள்!

இஸ்ரேல் நாட்டில் உள்ள வர்த்தக மற்றும் சேவைத் துறைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு...

டிசம்பர் மாதத்திற்கான முதியோர் உதவித்தொகை நாளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

டிசம்பர் மாதத்திற்கான முதியோர் உதவித்தொகையை தபால் நிலையங்கள் மூலம் இதுவரை பெறாத...

போக்குவரத்து அபராதங்களைச் செலுத்த GovPay முறைமை 7 மாகாணங்களில் அமுல்

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான அபராதங்களைச் செலுத்தக்கூடிய GovPay முறைமையானது தற்போது இலங்கையின்...