குருநாகல் மேயர் துஷார சஞ்சீவ பதவி நீக்கம் :வர்த்தமானி வெளியானது!

Date:

குருநாகல் நகர மேயர் துஷார சஞ்சீவ பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வடமேல் மாகாண ஆளுநர் வசந்த கரன்னாகொட வர்த்தமானி மூலம் இதனை அறிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஆவணம் நிறைவேற்றப்படாமை மற்றும் 2020 மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் மற்றும் அமுலாக்க உத்தரவுகளுக்கு இணங்காத காரணத்தினால் குருநாகல் மேயர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேயர் பதவி நீக்கம் 2022 டிசம்பர் 31ஆம் திகதிமுதல் அமுலுக்கு வந்துள்ளதாக ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேயர் பதவி வெற்றிடமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, அதன் கடமைகளை உள்ளடக்கும் பொறுப்பு, பிரதி மேயருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...