வேலைவாய்ப்பு பணியகத்தில் இருந்து திறைசேரிக்கு 3 பில்லியன்

Date:

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இருந்து பொது திறைசேரிக்கான மூன்று பில்லியன் ரூபாய் காசோலையை அமைச்சர் மனுஷ நாணயக்கார, உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளித்தார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த காசோலையை வழங்கியுள்ளது.

குறிப்பாக அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்தல், அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல், நெல் கொள்வனவு போன்ற அத்தியாவசிய நடவடிக்கைகளுக்காக கடந்த வருடம் பெற்ற பணத்தில் இருந்து இந்தத் தொகையை வழங்கியுள்ளது.

இவ்வாறு வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் திறைசேரிக்கு அவ்வப்போது வழங்கிய மொத்தத் தொகை 3,382 மில்லியன் ரூபாய் என்பதோடு மூன்று பில்லியன் ரூபாய் தொகையை ஒரே நேரத்தில் வழங்குவது இதுவே முதல் தடவையாகும்.

புற்றுநோய் வைத்தியசாலைக்கு மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு 500 மில்லியன் ரூபாயை மானியமாக வழங்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், 100 மில்லியன் ரூபாய் காசோலையும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...